Wednesday, February 18, 2009

எனது பார்வையில்!!!... (ஹைக்கூ)

விபச்சாரி
இரையாகி விட்டு
பசியாருகிறாள்!!!..

தாய்மை
மழலை பெண்ணுக்கு
தரும் பதவி உயர்வு!!!..

நிலா
ஒளி கொடுத்தே
தன்னை இருட்டாக்கி கொள்பவன்!!!..

கல்லூரி
மொட்டு விட துடிக்கும்
அரும்புகளை பூக்களாக
மாற்றும் களர் நிலம்!!!...


சகோதரன்
நம் நட்டுபுக்காக
தாயின் கருவறையிலிருந்து
சிறை மீண்டவன்!!!...

மதம்
அன்பை போதித்து
அடிதடியை வளர்க்கும்
மனிதப் படைப்பு!!!..

காதலி
காதலை வாங்கி
கண்ணீரை தருபவள்!!!..

மெழுகுவர்த்தி
அழுதுகொண்டே இருப்பதால்
இவனுக்கு ஆயுள் கம்மி!!!..

திருமணம்
சந்ததிகளை உருவாக்க
அனுமதிக்கப் பட்ட சடங்கு!!!...

No comments:

Post a Comment